Tuesday, January 29, 2013

விஸ்வரூபம் :சர்ச்சையும் சந்தேகமும் 1





விஸ்வரூபம் திரைப்படத்தின் மீது தமிழக அரசு பதினைந்து நாட்களுக்கு விதித்திருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் விலக்கி இருக்கிறது.

கமல்ஹாசன்,இஸ்லாமிய அமைப்புகள்,தமிழ்நாடு அரசு இடையே நடைபெற்ற காரசார வாக்குவாதத்தின் நிறைவில்,படத்தின் மீது தடை விதிக்க இயலாது என்றும்,மறுநாள் முதல்(ஜனவரி 29) படத்தை வெளியிடலாம் என்றும்,144 தடை உத்தரவை நீக்கிக் கொள்ள வேண்டும் என்றும்,இது யாரையும் புண்படுத்தும் படம் அல்ல என்று அறிவிப்பு செய்து படத்தை திரையிட அனுமதி அளித்துள்ள நீதிபதி வெங்கட்ராமன் அவர்களைப் பாராட்டுகிறோம்.

2011ல் ஆட்சிக்கு வந்தது முதல் தமிழக அரசு அதன் முதல்வர் சில சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார்;மாநிலத்திற்கு உதவ மறுக்கும் மத்திய அர சை எதிர்த்து சண்டமாருதமும் செய்து வருகிறார்.ஆனால்
விஸ்வரூபம் பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதாவும் மாநில உள்துறையும் கையாண்ட விதம் சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.

ஒரு தரப்பு புகார் அளிக்கும் போது,மறுதரப்பை அழைத்து விளக்கம் கேட்டு தீர்விற்குப் போவதற்கு மாறாக ஒரு தரப்பாக நடந்து கொள்வது நேர்மையான அணுகுமுறை அல்ல.விஸ்வரூபம் பிரச்சினையில் அரசு ஒருதலைசார்பாகவே நடந்து கொண்டது.

இஸ்லாமிய அமைப்புகள் இரண்டு சுற்று கமல்ஹாசனோடு பேசியிருக்கிறது.படமும் போட்டு காட்டப்பட்டிருக்கிறது.படம் பார்த்த உடன் மாற்று கருத்தைச்சொல்லாமல் பல நாட்கள் கடந்து,படம் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்திரிக்கிறது என்று சொல்வது யாரோ இஸ்லாமிய தரப்பை தூண்டி விட்டிருக்கிறார்கள் என கருத வேண்டி உள்ளது.

சென்னை காவல்துறையில் கொடுக்கப்பட்ட புகாருக்கு சென்னையை சுற்றி படம் திரையிடக்கூடாது என காவல்துறை,144 ஐ காரணம் காட்டி தடைஉத்தரவு விதித்திருக்கலாமே தவிர(வாதத்திற்கு)மொத்த தமிழ்நாட்டிற்குமாக தடை விதித்திருப்பதுதான் அரசை சந்தேகத்தோடு பார்க்க வைத்திருக்கிறது.

அரசின் இந்த ஒருதலைசார்பிற்கு காரணம் என்ன என்று நாம் ஊகிக்கலாமெனினும் அரசு தன் தரப்பு விளக்கத்தை மக்கள் மத்தியில் விளக்க வேண்டும்.மாறாக சென்னை முதல் அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது.இதன் தீர்ப்பு வந்த பின் ஏனைய விடயத்தை அலசலாம்..   

No comments:

Post a Comment