Sunday, September 30, 2018

இவரும் இவர் கதைகளின் படமும் : மண்ட்டோ

Manto எனும் பெயரில் நந்திதாதாஸ் எழுத்து & இயக்கத்தில் ஆங்கில சப் டைட்டிலுடன் கூடிய இந்தி படம் கடந்த 21 ஆம் தேதியிலிருந்து தலா ஒரு காட்சிகள் வீதம் சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ, லூக்ஸ் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது.nandita dos initiatives நிறுவனம் படத்தை சிலருடன் இணைந்து தயாரித்திருக்கிறது.

புதுமைப்பித்தன் பிறந்து ஆறாண்டுகளுக்கு பின் பிறந்து , 1955 ஆம் ஆண்டில் 43 வயதில் இறந்து போன படைப்பாளி சாதத் ஹசன் மண்ட்டோ.பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் லூதியானாவில் பிறந்தவர். வாழும் பொழுதே தென்கிழக்காசியா நாடுகளின் புகழ்பெற்ற உருது சிறுகதை படைப்பாளராக அறியப்பட்டவர்.இலக்கியம் ,இதழியல்,சினிமாஉலகில் பெரிதும் பேசப்பட்டவர் மண்ட்டோ




மண்ட்டோ  கதைகள் பாலியல் ஆபாசம் என்பதற்காக பிரிட்டிஷ் அடசியில் இவர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன .குடும்பம் நட்பு வட்டங்களில் தன்  கதைகளுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் .தீராத குடிப்பழக்கத்திற்கு ஆளானவர் .அதனாலேயே இளவயதில் மரணம் அடைந்தவர் சாதத் ஹசன் மண்ட்டோ .இந்திய விடுதலையும் பிரிவினையும் தொடங்கி வைத்த இஸ்லாம் மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களின் வலிகளின் இலக்கிய ஆவணமாக மண்ட்டோ கதை விளங்குகிறது .மதவெறிக்கு எதிராக மானுட நேயத்தை தன படைப்புகளின் வழியாக முன் வைத்தவர் .

இவரைப் பற்றிய படமும் இவர் கதைகளின் படமுமாக அற்புதமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது மண்ட்டோ .படைப்பாளியும் கதாபாத்திரமும் சந்திக்கும் உத்தியை படத்தில் நந்திதாதாஸ் கலாபூர்வமாகப் பயன்படுத்தி இருப்பார் .மண்ட்டோ பம்பாய் நிலத்த்தின் வழியாக உலகை தரிசித்தவர் என்ற புரிதலை , பழுப்புநிறக் காட்சிகளின் வழியாக 40 களிலான பம்பாயில் மண்ட்டோவின் வாழ்வை பார்வையாளர்களுக்கு  அழகியலாக  உணர்த்தி  இருப்பார் இயக்குநர் .

ண்ட்டோவின் திற ,சில்லிட்ட சதைப்பிண்டம்,டோபா டேக் சிங் கதைகலின் பாத்திரங்கள் மண்டோவோடு சக பாத்திரங்களாக இணைக்கப்பட்டு ,எழுத்தும் சினிமாவும் முயங்கும் காட்சி தரிசனத்தை நமக்கு நந்திதா தாஸ் கையளித்திருப்பார்  .வரலாற்று காலக்கட்ட படம் என்பதற்கான பழுப்பு டோனில் கார்த்திக் விஜய் படமாக்கி இருக்கிறார் .ஸ்ரீகர் பிரசாத்தின் படக்கோர்வை மிளிர்கிறது .நவாஸுதீன் சித்திக்  மண்ட்டோவாக வாழ்ந்திருக்கிறார் .அவரின் மனைவியாக  ரசிகா சாந்தமான இயல்பான உடல்மொழியில் வசீகரிக்கிறார்

படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலோடு , படம் முடிந்து டைட்டில் ஓடும் பின்புலமாக இசைக்கப்படும் பாடலும் மனதை வசீகரிக்க சினேகா கான்வால்கர் காரணம். பின்னனி இசை சஹிர்ஹுசைன்  என டைட்டில் பெயர் வருகிறது.அது தபேலா சாஹீர் ஹுசைனா  என தெரிய வேண்டும் .

இந்து இஸ்லாம் எனற பிரிவினைகள் மேலும் மேலும் அதிகரிக்க செய்யப்படும் காலத்தில் ,அவைகளை எதிர்க்க மானுட நேசம் கொண்ட சாதத் ஹசன் மண்ட்டோ நமக்கு மேலும் மேலும் தேவைப்படுகிறார் .அதன் திரைமொழியே மண்ட்டோ .வாழ்த்துக்கள் நந்திதா தாஸ்.

Sunday, June 3, 2018

படைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்





கலைஞரை நான் 5 முறை சந்திருக்கிறேன் .நான்குமுறை தமுஎகச பிரதிநிதிக்குழுவில் இருந்து போய் பார்த்து பேசி இருக்கிறோம்  .ஒரு முறை அந்த முதன்முறையான  சந்திப்பு , நான் மாணவனாக இருந்த பொழுது, முதல்வராக  இருந்த அவரை , வறவேற்கும்  பொருட்டான நிமித்தம் 1974 ஆம் ஆண்டு நிகழ்ந்தது .

மூன்று சந்திப்புகள் சுவாரசியமான சந்திப்பாக இருந்தது .அதில் ஒன்றை மட்டும் இப்பொழுது சொல்கிறேன் .பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகளுக்கும் ராசபக்சே தலைமையிலான அரசிற்கும்  இலங்கையில் பெரும் யுத்தம் நடந்த 2008.

தமிழ்நாடு அரசின் கோட்டையில் ,கலைஞர் முதல்வராக இருந்து ,இலங்கை தமிழர் பாதுகாப்பு நிதியை,  முதல்வர் நிவாரண நிதிக்கு திரட்டிக் கொண்டிருந்தார் .இலங்கை தமிழர்க்கு,  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பாக நம்மால் இயன்றதை அளிப்பது என இயக்குனர் பாலுமகேந்திரா சொன்ன ஆலோசனையை

அருணன் தலைவராகவும் ,ச.தமிழ்ச்செல்வன் பொதுசெயலாளராகவும் ,இரா.தெ.முத்து பொருளாளராகவும் இயங்கிய தமுஎச ஏற்று கொண்டது.தமிழ்நாட்டு முதல்வர் கலைஞரை  சந்தித்தது நிதியை அளிப்பதற்காகன நேரத்தை உறுதி செய்ய ,  பாராளுமன்றத்தின்  திமுக மேலவை தலைவராக இருக்கும் கவிஞர் கனிமொழி உதவியை தொலைபேசியில் பேசிப் பெற்றோம் .

2008 நவம்பர் 7 வெள்ளி

காலை 11 மணி .இலங்கை தமிழர் பாதுகாப்பு நிதியை காசோலையாக எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டரசின் கோட்டைக்குச் சென்றோம் .இயக்குனர் பாலுமகேந்திரா ,சிகரம் ச.செந்தில்நாதன் ,இரா.தெ .முத்து ,மயிலை பாலு ,கே .பி.பாலசந்தர்,மணிநாத் ,நா.வே .அருள் என தமுஎச வின் குழுவாகச்   சென்றோம்.

முதல்வர் அறைக்கு வெளியே தொழில் அதிபர்கள் பலர் நிதியை அளிக்க காத்திருந்தனர்.ஒரு சீட்டில் வருகையை எழுதிக் கொடுத்தோம் .அடுத்த சில நிமிடங்களில் நாங்கள் அழைக்கப்பட்டோம் .முதல்வரின் செயலர் சண்முகநாதன் புன்னகையோடு வரவேற்றார் .

நாங்கள் கொண்டு சென்ற காசோலையை  முதல்வரின் கையில் வழங்கினோம் .முதல்வர் கலைஞர் புன்னகை ததும்ப நாங்கள் அளித்த காசோலையைப் பெற்றுக் கொண்டார் . கரகரப்பான குரலில்  மகிழ்ச்சி என்றார் .

முதல்வரோடு நின்ற புகைப்படத்தை அரசு காமிராகாரர் எடுத்தார் .மறுநாள் நாளேடுகளில் அது செய்தியாக வெளிவந்தது . அவ்வளவு மகிழ்ச்சியாக நாங்கள் அளித்த காசோலையை முதல்வர் பெற்றார் .பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல  இலங்கை தமிழர் பாதுகாப்பு நிதிக்கு தமுஎகச ரூபாய் 25000 ஐ மட்டுமே வழங்கினோம் .

ஆனாலும் இந்தச்  சிறிய தொகையை பெருமனதோடுப் பெற்று , எமக்கு  மதிப்பு செய்தார் முதல்வர் கலைஞர் . பெருந்தன்மையான,  படைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர் அவர்களுக்கு இன்று 95 ஆவது பிறந்தநாள் .அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்