Sunday, June 30, 2013

சமணர்கள் யார்?










இவர்கள் பிராமணர்கள் அல்லர்.பிராமணர்களுக்கு முன்பு,இந்தியாவில் ஆரிய குடியேற்றம் நிகழ்வதற்கு முன் இருந்த,திராவிடர்களின் சமயம் இது.

சமணம் என்றால் உருவ வழிபாடற்ற சமயம் என்று பொருள்.
ஆன்மாவில் நம்பிக்கை இல்லாத ,இயங்கு பொருள்(matter) சார்ந்த செயற்பாட்டின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள்.
இந்தப் பார்வை வைதீக மதமான பிராமணியத்திற்கு ,பிற்காலத்தைய இந்து மதத்திற்குக் கிடையாது.

அன்றைய இனக்குழு,அதன் பின்னான தொடக்க வேளான் சமுகப் பொருளாதாரத்தின் மையமாக விளங்கிய ஆடு,மாடுகளை அழிப்பதிலிருந்து காக்க வேண்டி,கொல்லாமை,புலால் உண்ணாமையை கடைபிடிக்க வழி காட்டியவர்கள்.

இந்தியாவில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயன்ற வைதீக மதம்,இவர்களிடமிருந்தே புலால் புசிப்பதை விடுத்து,புலால் மறுப்பை கடைபிடிக்கத் தொடங்கினார்கள்.

தொல்காப்பியர்,திருவள்ளுவர்,இளங்கோவடிகள் போன்றோர் சமணம் சார்ந்த படைப்பாளிகள்;அறிவாளிகள்.

தத்துவம்,அறிவியல்,இலக்கியம்,கலை,மருத்துவம் போன்ற துறைகளில் சமண அறிஞர்கள்,கலைஞர்கள்  மதிப்புவாய்ந்த பங்களிப்பை தமிழுக்குச் செய்தவர்கள்.

கி.பி 16 ஆம் நூற்றாண்டு வரை செல்வாக்கோடு இருந்து,மாறிய சமுகத்தின்  பொருள் சார்ந்த அதீத நாட்டத்திற்கு,சமணத்தின் முப்புரக் கொள்கையான காமம்,வெகுளி,மயக்கத்தை அழித்தல் என்ற செயற்பாடு, ஆசை,அனுபவித்தல் போன்ற தன்னோக்குப் பார்வைக்கு உதவியாக இல்லாததால்,கி.பி 16 க்கு பின் பின்னடைவை  சந்தித்தது.

என்றாலும் முற்றாய் அழிந்துவிடவில்லை.காத்திரமான தத்துவ,இலக்கிய செயற்பாட்டை இன்றளவும் தமிழுக்குத் தந்து கொண்டிருக்கிறது சமணம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்ற குறளின் முதற்பாட்டில் உள்ள ஆதிபகவன் என்பது கடவுள் அல்ல.
சமணத்தின் ஆதி தீர்த்தங்கரரான ஆதிநாதர் குறிப்பது.இந்த ஆதிநாதர் நிலந்தருதிருவின் பாண்டியனின் முதற்சங்கத்தில் இருந்த மதிப்புமிகு தமிழாசானும் ஆகும்.

9 comments:

  1. தற்காலத்திலும் வடார்க்காடு மாவட்ட பகுதிகளில் தமிழ் சமண மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். தமிழ் சமணம் முற்றாக அழிந்துவிடவில்லை. வைதிக மதத் தாக்கங்கள் சமணத்தில் இன்றளவும் உள்ளது, அவற்றை களைந்தால் சமணம் பகுத்தறிவு வாய்ந்த, உலகில் மதக் கலவரம் ஏற்படுத்தாத ஒரே சமயம், சமணமே.

    ReplyDelete
  2. மகிழ்ச்சி நிரஞ்சன். தமிழ்சமணத்தில் இருக்கும் வைதீக திரிபுகளை,அதனுள் இயங்கும் சமண நண்பர்கள்,சரிப்படுத்த முன் வரவேண்டும்.வைதீகத்தை எதிர்த்த கருத்துப் போராட்டமும் பொதுவெளியில் வலுவாக முன்னெடுக்கப்படவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. மிக சரி நண்பரே.

      Delete
  3. சமணர்கள் பலர் இன்றைய தமிழ் இஸ்லாமியர்கள்

    ReplyDelete
  4. சமணர்கள் வேதம் அற்றவர்களாக கூறுகிறீர்கள். கிபி 16 ஆம் நூற்றாண்டு வரை இருந்தாக கூறுகிறீர்கள் இதுவெல்லாம் உண்மை என்றால் இன்றைக்கு சமணர்கள் யார்.

    எந்த மதம்
    என்ன சாதி
    என்ன குலம்

    ReplyDelete
  5. ஐயா வைதீகம் என்று தாங்கள் குறிப்பிடுவது எது?

    ReplyDelete
  6. யசூர் வேதத்தில் 2வது தீர்த்தங்கரர் அஜிதநாதரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்த்தங்கரர்கள் பிராமணர்கள் அல்லர்.பிராமணர்களுக்கு முன்பு,இந்தியாவில் ஆரிய குடியேற்றம் நிகழ்வதற்கு முன் இருந்த,திராவிடர்களின் சமயம் இது.

    ReplyDelete
  7. யசூர் வேதத்தில் 2வது தீர்த்தங்கரர் அஜிதநாதரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்த்தங்கரர்கள் பிராமணர்கள் அல்லர்.பிராமணர்களுக்கு முன்பு,இந்தியாவில் ஆரிய குடியேற்றம் நிகழ்வதற்கு முன் இருந்த,திராவிடர்களின் சமயம் இது. ஆதிநாதரைத்தான் சிவன் என்று ஆரியர்கள் பெயர் மாற்றம் செய்து சைவம் மதம் என்று மத ஆக்கிரமிப்பு செய்துள்ளாரகள். 24 தீர்த்தங்கரர்களும் இச்வாகு குல மன்னர் பரம்பரையினர் தான் ஆதிநாதரின் மகன்கள் பரதன் மற்றும் பாகுபலி இருவரும் இந்தியா முழுவதும் ஆட்சி செய்து மக்கள் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்துள்ளார்கள் ஆதலால் ஆரியர்கள் இச்வாகு குலம் இராமாயணம் என்ற பொய்யான கதையை சொல்லி மக்களை ஏமாற்றியுள்ளார்கள். மகாபாரதப்போரில் இச்வாகு குல கடைசி மன்னர் கொல்லப்பட்டார். மகாபாரதப்போர் திராவிட மன்னர்களை கொல்ல உருவாக்கப்பட்டதே மகாபாரதப்போருக்கு பின்னர் மீதி இருந்த திராவிட படைகளை தென்னிந்திய பகுதியில் ஆக்கிரமிப்பு செய்ய வைத்த ஆரிய ரிஷிகள் அதன்பின் வட இந்திய பகுதிகளை ஆரிய மன்னர்களின் தேசமாக மாற்றி விட்டார்கள் மரபணு ஆராய்ச்சியில் வட இந்தியா முழுவதும் ஆரிய மரபணு நிரம்பியுள்ளது ஆனால் தென்னிந்திய பகுதி முழுவதும் திராவிட மரபணு நிரம்பியுள்ளது ஆரியர்கள் வருகைக்கு முன்பு பாகிஸ்தான் மற்றும் வட இந்திய பகுதியில் நகர நாகரீகமாக வாழ்ந்து வந்த சிகப்பு நிற திராவிட மன்னர்கள் மற்றும் யாதவர் மன்னர்கள் மகாபாரதப்போர் மூலம் கொல்லப்பட்டார்கள் அதன் பின்னர் தென்னிந்திய பகுதியை திராவிட படைகளின் ஆக்கிரமிப்பு பகுதியாக மாற்றி வட இந்தியா முழுவதும் ஆரியர்கள் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் ஆதாரமாக ஆரியமரபணு ஆராய்ச்சி முடிவுகள் இருக்கிறது

    ReplyDelete
  8. தமிழர்கள் இயற்கை வழிபாட்டையும், மூததையர்கள் வழிபாட்டையும் பின் பற்றியவர்கள் மதல் கடல்கோளாலும் அதன் பின் தோன்றிய இரண்டாம் கடல் கோளாலும் தென் தமிழகத்தின் பெரும் பகுதி கடலுக்குள் சென்று விட்டதால் (லெமுரியா கண்டம்) இனி வரும் காலங்களில் மேலும் நிலப்பரப்புகள் கடல் கோளால் அழியும் நிலை இருந்ததால் ஒரு பெரிய கூட்டம் வடக்கு நோக்கி சென்றது அப்போது வட இந்திய பகுதியில் மக்கள் தொகை இல்லை எந்த குடியேற்றங்களும் இல்லை எனவே தமிழர்கள் நதிகள் ஓடக்கூடிய பகுதிகளில் குடியேறினார்கள் மேலும் தமிழர்கள் விவசாய பெருங்குடிகளா இருந்ததால் மருத நிலங்களை நதிகள் பாயும் இடங்களாக பார்த்து தங்கள் குடியேற்றங்களாக அமைத்துக்கொண்டார்கள்.தமிழர்களின் நாகரிகம் நகர நாகரிகம் சிந்துவெளியில் சிறந்த நாகரிகத்தை நிறுவினர் இந்த நாகரிகம் உலகின் முதல் நாகரிகம் எல்லா நாகரிகத்திற்கும் மூத்தது.காலத்தால் எல்லா நாகரிகத்திற்கும் தாய் எனவேதான் உலகத்தின் அனைத்து நாடுகளிலும் இந்தியா என்று சொல்லும் போது அந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் கலைகளை கற்று கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு உலகத்தின் மூலை மூடுக்கிலிருந்தெல்லாம் மக்கள் கூட்டம் இந்தியாவை நோக்கி வந்தது. ஆரம்ப காலத்தில் மக்கள் தொகை குறைவு வட இந்தியா முழுவதும் காட்டு பகுதியாக இருந்தது. தமிழர்களின் நாகரிகம் சிந்து வெளியில் சிறந்து விளங்கிய காலத்தில்தான் ஆரியர்களின் வருகை கைபர்,போலன் கணவாய் வழியாக நிகழ்ந்தது.ஆரியர்கள் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு நதி ஓரங்களில் தங்களின் தற்காலிக குடியிருப்பை அமைத்து கொண்டு நீர் நிலைகள் வற்றினாலும் மேய்ச்சல் நிலம் குறைவுபட்டாலும் அடுத்த இடத்திற்கு இடம் பெயர்வதற்கு தயாராக இருந்தவர்கள் ஒரு இடத்தில் இருக்கமாட்டார்கள் இதுதான் ஆரியரகளின் நாகரிகம். சிந்துசமவெளியில் தமிழன் ஏற்படுத்தியிருந்த நகரின் அருகில் ஆற்றோரத்தில் அமைந்த ஆரிய குடிசைகள் அங்கிருந்த பெண்கள் வனப்பு மிக்கவர்களாகவும் அவர்களின் நிறம் எளிதில் ஆண்களை காம உணர்சியை தூண்டுவதாகவும் இருந்தது இதனால் தமிழர்கள் இவர்களை தங்கள் பயன்பாட்டில் வைத்து பராமரித்தார்கள் இதற்கு ஆரிய ஆண்களும் உடன் பட்டார்கள். இந்த நிலையில் தான் ஆரியர்கள் எல்லாம் ஒன்று கூடி தமிழரகளுக்கு ஏதிராக சதி வலையை பின்ன தொடங்கினார்கள்.ஆரியர்கள் நாடோடிகளாக ஆடு,மாடுகளை மந்தை,மந்தைகளாக தேசாந்திரமாக மேய்த்துக்கொண்டிருக்கும் வேளையில் சோமபானம்,சுராபானம் போன்ற போதை தரும் பானங்களை தயாரிக்க கற்றுகொண்டிருந்தார்கள் இதை வைத்து தமிழர்களை ஒழிக்க கங்கணம்கட்டிகொண்டிருந்தார்கள் தக்க சமயத்திற்காக காத்திரந்தார்கள் உறவாடி கெடுப்பது என்பதுதான் அவரகளுடைய தாரகமந்திரம் அதை தமிழர்கள் மீது கையாண்டார்கள்.தமிழன் புறமுதுகு காட்டி ஓடுபவன் கிடடையாது ஆனால் ஆரியர்களின் கோட்பாடே அதுதான் ஆரியர்களின் கனவு கைகூடியது ஒரு நாள் இரவு விருந்து என்று அழைக்கப்பட்டு சோமபானமும் சுராபானமும் பரிமாரப்பட்டது மயங்கி விழுந்து கிடந்த தமிழர்கள் கொத்து,கொத்தாக வெட்டி வீழ்தப்பட்டார்கள் சிந்து சமவெளி முழுவதும் மரணஓலம் ஒலித்தது பெண்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்தனர் பின்னர் விழித்துக்கொண்டு தங்கள் குழந்தைகளையம் முடிந்தளவு உடமைகளையும் எடுத்துக்கொண்டு சிந்துவெளியை விட்டு வெளியேறி தூர தேசங்களில் குடியேறினர்.இந்நிகழ்சி தமிழர்களின் மனதில் ஆறத வடுவாக இன்றளவும் உள்ளது. இந் நிகழ்வுக்கு பின்பு வழி,வழியாக இச்செய்தி சந்ததியினர்களுக்கு சொல்லப்பட்டுவந்ததால் பிற்காலத்தில் ஆரியர்களின் இந்து மதத்திற்கு எதிரா தோற்றுவக்கபட்ட மதங்கள் தான் சமணமதமும்,பௌத்தமதமும் இதை தோற்றுவத்தவர்கள் தமிழர்கள் தான் இந்து மதம் தமிழர்களின்மதம் கிடையாது இயற்கை வழிபாடும்,மூதாதையர் வழிபாடும் ஆகும் அதிலும் உழவு தொழிலுக்கு உறு துணையாக இருக்கும் சூரியவழிபாடே ஆகும். வந்தாரை வாழவைக்கும் தமிழன் தான் எத்தகவையவன் என்பதை மறந்து பகுத்தறிவுக்கு ஒவ்வாதவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டு ஆரியத்தோடு கலந்து தமிழனின் தனி சிறப்பை இழந்து விட்டான்.இவற்றை எப்போது மீட்பது என்பதுதான் இப்போது நம் முன் உள்ள பெரிய சவால்?தமிழர்கள் சிந்திப்பார்களா?நன்றி!

    ReplyDelete