Thursday, February 26, 2015

கணங்களின் தோற்றம்





-1-
கனவுகளில் உயர்ந்தெழும்
வீர நாச்சியாளின் நெடுவாள் முனை
உன் கண்களை பிரதிபிம்பம் செய்து கொண்டிருக்கின்றன
சில கணங்களினூடாய் தோற்றம் கொள்ளும் உன் முக இறுக்கமும்
 நாச்சியாளையே ஒர்மை செய்து கொண்டிருக்கிறது!

-2-
கன்னக்குழிச் சிரிப்பில்
சிக்குண்டு நான் கிடக்க
பெருவரம் வேண்டும் சகியே சகியே!

-3-
 ஆழப் பெருங்கடல் ஆயினும்
உன் மடிதானே அதன் புகலிடம்!

-4-
திசைப்பறவைகள்
ஒரு பொழுதும்
திக்கற்றுக் கிடப்பதில்லை!

-5-
வளர்பிறை
உன் குறுநகை!

-6-
அடர்ந்து பெய்யும் பனியும்
உன் அன்பையே ஞாபகப்படுத்துகிறது!








Tuesday, February 24, 2015

இயக்குநர் ஆர்.சி.சக்தி



மனிதரில் இத்தனை நிறங்களா? சிறை,கூட்டுப்புழுக்கள் என்று வந்த 
அவரின் படங்களைப் பார்த்து,அவர் மீது மரியாதை வந்த காலம் அது.
தர்மயுத்தம் படம் பெருவெற்றி பெற்றதோடு,அந்த தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு என்று வரும் மலேசியாவின் பாடலை எங்கு கேட்டாலும் உணர்வலை புரளும் படத்தை தந்தவர்.
அவரை 96 வாக்கில் சாய்நகர் வீட்டில் பல முறை சந்தித்து பேசியிருக்கிறேன்.
சினிமாவின் சாயலை எப்போதும் சொந்த வாழ்வில் படிய விடாத எளிய மனிதர்.
அவரின் பிள்ளைகளும் அப்படியே.என் வழியாக பல ஊர்களின் கலைஇரவிற்கு வந்து மனசில் உள்ளதை பளிச்சென்று பேசி மனங்களைக் கவர்ந்தவர்.
அவரின் மறைவிற்கு அஞ்சலியும் வணக்கமும்