Thursday, July 7, 2011

கைத்தடி ஏந்திய காவலன்


  
 ஆண்மையின் ஆதிக்கங்களிலிருந்தும்
பெண்மையின் இயலாமையிலிருந்தும்
பெண்மை வன்மையோடு எழ
உண்மை பேசியவன் நீ

இனஇழிவு அழிப்பதற்க்காய்
இறுதி நாள் வரையிலும்
கலகம் செய்த
கலகக்காரன் நீ

இருபத்தி இரண்டு ஆண்டுகளாய்
இட ஒதுக்கீட்டு கர்ப்பத்தை
வலிக்க வலிக்கச் சுமந்த
அதிசயத் தாய் நீ

அரசியல் சாசனத்து
ஆரம்பத் திருத்தத்தின்
ஆதிமூலமும் நீ

தமிழுக்கும் தலித்திற்க்கும்
கோயில்களில்
இடம் தரச்சொன்ன
நிரந்தரம் நீ

இந்துத்வா  இடுப்பொடிக்க
என்றும்
கைத்தடி ஏந்திய
காவலன் நீ 

   

No comments:

Post a Comment