Monday, February 6, 2017

முடிந்து போனதா காந்தி சகாப்தம்?






இது போன்றதொரு குளிர்காலம் அது. 1948 ஜனவரி 30 வெள்ளி மாலை 5 மணிக்கு தொடங்கப்பட வேண்டிய பிரார்த்தனைக் கூட்டத்திற்கு பத்து நிமிடம் தாமதமாகி விட்டதே என்ற பரிதவிப்பில் 79 வயதைக் கடந்த மகாத்மா காந்தி தன் பேத்திகளான அபா, மனு தோள்களில் மிதந்து வருகிறார்

.புல்வெளியின் குறுக்காக நடந்து மேடைக்கு வர நடக்கிறார். புஷ்கோட் அணிந்த உடல் பெருத்த அந்த நபர் நின்ற இடத்தில் ஒரு குழந்தை நின்றிருந்தால் கூட காந்தி மீதான குறி தப்பி இருக்காதுதான். காலை தொட்டு வணங்குவது போல வந்த நபர், தடுக்க வந்த அபாவை பெண்ணென்றும் பாராது தள்ளி சாய்த்து விட்டு, கால்சராயிலிருந்து பெனிட்டா ரக துப்பாக்கியை எடுத்து, மூன்று முறை காந்தியை நோக்கிச் சுட்டான். 

முதல் இரண்டு குண்டுகள் காந்தியின் வலதுமார்பை துளைத்தது. மூன்றாவது குண்டு காந்தியின் வலது பக்க வயிற்றை துளைத்தது. ஹே ராம் என்ற சொற்களை உச்சரித்தபடி புல்வெளியில் சாய்ந்து விழுந்தார் காந்தி. 

டெல்லி பிர்லா மந்திரின் மேல் ஒளிர்ந்த மாலை நேரச்சூரியன் யாவற்றையும் பார்த்துக் கொண்டுதானிருந்தான். கண நேரத்தில் மகாத்மாவின் சகாப்தம் முடித்து வைக்கப்பட்டது என ஆர்.எஸ்.எஸ் சின் நாதுராம் கோட்சே நினைத்தான். 

எழுபது ஆண்டுகள், என்ன எண்ணாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அரசிலிருந்து மதத்தை பிரிக்க எண்ணியவனின், சிறுபான்மை மக்களின் கேடயமாக விளங்கியவனின் , சிறுபான்மையை மதிக்கும் பெரும்பான்மையின் செயலே சுதந்திரம் என்ற மகாத்மா காந்தியின் சகாப்தம் முடியாது தொடரும். லால் சலாம் மகாத்மாஜி

No comments:

Post a Comment