Friday, August 26, 2016

சமகாலத்தின் சாட்சியம்:




வாதை நிரம்பியதாய் இருக்கிறது 
வாழ்க்கை

எதையொன்றைப் பிடித்துக் கரைசேர 
ஏலுமோவென கானல் காட்டுகிறது

நித்தியக் கணங்களை நினைந்து 
உதிர்ந்து போகும் புன்னகைகள்


எங்கும் கையேந்தும் விண்ணப்பங்கள்
ரம்பம் கொண்டு அருக்கின்றன


குறுக்கும் நெடுக்குமாய் அலைவுறும் பாதங்கள் 

சமகாலத்தின் சாட்சியமாகிறது

கொண்டாட்டமும் ஆவேசமுமாய் குமிழிடும் 

வெர்ச்சுவல் உலகம்
இடுகுறிகளில் கிடக்க


இடுகாடுத் தேடிப் பிணம் சுமந்து
கண்ணீரைப் படர்த்துகிறார்கள் ஏதிலிகள்


வாதையை மேலும் மேலும் கையளிக்கும்
அரசியல் தட்பவெட்பங்கள் 


புள்ளி விலகாத மைய அச்சில் 

தொடர்ந்து சுழல்க 

குடிமைச் சமுகத்தின்
கூக்குரல் ஓர்மைகள்


நன்றி: ரோகிணி , ரேவதி குமார்

No comments:

Post a Comment