Thursday, July 30, 2015

வாழ்வை அளந்து பார்க்கும் ஆன்மச்சொற்கள்








இன்று ஒரு பாடல் கேட்டேன். ஓ..ஓ..வென்று கூவி ஊருக்கு செய்தியைச் சொல்லும் பாடல். மேல் கீழ் இறங்காமல் நின்று சஞ்சாரிக்கும் குரல் வழியிலான பாடல்.

தப்பும்  பேடும் கிடாரும் வழி நடத்த,வாழ்வின் உண்மையைச் சொல்லும் பாடல் இது. நடைபாதையில் வாழ்வின் உண்மைகளை சித்தாந்தமாக சொல்லி வலம் வரும்  சித்தன் அல்லது சூஃபி ரீதியிலான சுண்டியிழுக்கும் பாடலை கேட்டேன்

.4.15 நிமிடம் ஓடும் பாடல்

.சின்னச் சின்ன சொற்கள் எடுத்து வாழ்வை அளந்து பார்க்கும் ஆன்மப்  பாடல். கவிதையை விழுங்கி விடாத கவனத்தோடு சொற்களுக்கும் , அதன் உணர்விற்கும் ஏற்ற மெட்டை கேட்டு , அதன் வழி நம் காதுகளைக் கோரும் பாடலாக இருக்கிறது.

இது தூர்தர்சனின் இசைத்திரட்டில்(ஆல்பம்) வந்திருக்கும் புதிய பாடல்.ஏ.ஆர்.ரகுமானின் உதவியாளர் ப்ரேம்குமார் இசையமைத்துப் பாடி இருக்கிறார். பாடலின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் இசையுமாகும்.

நானோர் நாடோடி
என் பயணம் எனைத் தேடி
பாதைகள் பல கோடி
அதன் திருப்பமோ உயிர்நாடி

உலகில் உண்மை எது பொய் எது என்று தேடுவதும் ,  நல்லதை தீயதை தேர முயல்வதும் , நெடும் வாழ்க்கைப் பயணத்தில் சஞ்சலமுறும் மனம் ,  தான் யாரென்று உரசிப் பார்த்து , சித்தாந்தம் பேசுவதும் ,வாழ்வை ஒரு புதிராக்கி மனதின் முன் நிறுத்தி மிரட்சியுறுகிறது மானுடம்

 இந்தத் தொனியிலான பாடலாகத் தொடங்கி  தொடர்ந்து வாழ்வின் மனிதரின் சிக்கல்களை பேசும் தான் யாரென தன்னை விசாரிக்கும் ஆன்மப் பாடலாக விரிந்து போகிறது.

மவுனம் எழுவதும்
வலியைத் தொடுவதும்
என்க்கொரு வேடிக்கையே

என வலியைத் தாண்டுவதாக சொல்லும் மனம் , அடுத்து வாழ்வின் தீராத வலிகளால்,

என் பெயர் உடன் பெயரா
என் பெயர் உயிர்பெயரா

என நின்று மருகி கேள்வி கேட்கிறது
முடிகிற புள்ளியை
தொடங்கும் புள்ளியாய்
புரிதல் தேடுகிறேன்

ஆயிரம் ஓட்டைகள் வாழ்வில் இருந்தாலும் வாழ்வின் மீதான நேசம் , மேல் கண்டவாறு வாழ்வை முடிகிற முற்றுப் புள்ளியாக இல்லாமல்,தொடரும் தொடர் புள்ளியாக பாவித்து தொடர்ந்து பாடிப் போகிற ப்ரேம்குமாரின் குரலிற்கான வரியைத் தந்து,  தனக்கான ஓரு வலுவான தடத்தை துலக்கப் படுத்தி,திரையிசையில் தனியிசையில் பயணிக்கும் கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினியை வாழ்த்துகிறேன். 

2 comments:

  1. நல்ல பகிர்வு...வாழ்த்துக்கள்
    http://swthiumkavithaium.blogspot.com/

    ReplyDelete