Thursday, March 22, 2012

இலங்கைக்கு எதிரான இந்திய நிலைபாடும் கூரை மேலேறி கோழி பிடிக்க வக்கில்லாத உளுத்தம் பருப்புகளும்

சென்னையின் பல இடங்களில் தி,மு.க இளைஞர் அணி சார்பாக நீளமான சுவரொட்டிகள் ஒட்டப்படிருக்கின்றன.தாத்தாக்கள் கட்டும் கோமணத்துணி போல நீள நீளமாக அந்த சுவரொட்டிகள் ஒட்ட்ப்பட்டிருக்கின்றன.தலைவர் கலைஞர் வேண்டுகோளுக்கிணங்க ஜெனிவா கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக பேசப்போகும் இந்தியாவிற்கும்.பிரதமர் மன்மோகன்சிங்,சோனியாவிற்கும் நன்றி நன்றி என்ற ரீதியில் சுவரொட்டி வார்த்தைகள் காணப்பட்டன. அந்த சுவரொட்டி வாசகங்களை பார்த்து சிரிப்பாணி தாள முடியவில்லை 2ஜி வழக்கில் யாரை கைது செய்தாலும் .தனது குலக்கொடி,பட்டத்திளவரசி கனியை மட்டும் கைது செய்யக்கூடாது என்ற கலைஞரின் வேண்டுகோளுக்கு, செவி கொடுக்காமல் ஆறு மாதம் திகார் சிறையில் பத்துக்கு பத்து தனிமை அறையில் கனிமொழியை அடைத்து வைத்தப் பொழுது, இதே சோனியா அண்ட் மன்மோகன் கம்பெனி கலைஞரின் வேண்டுகோளுக்கு என்ன மதிப்பு கொடுத்தனர்.?கலைஞரின் குலக்கொடி கைது குறித்த வேண்டுகோள் என்னவாயிற்று? இலங்கைக்கு எதிராக தற்போது இந்தியா நிற்பதற்கு காரனங்கள் வேறு..அவைகள் அரசியல் காரணங்கள் மட்டுமில்லாமல் காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2 இன் உள் குத்தும் உண்டு.சேனல் 4 ஒளிபரப்புகள் மூலம் தமிழகம் முழுவதும் காணப்பட்ட மத்திய அரசுக்கு,இலங்கைக்கு எதிரான தமிழக மக்களின் மனநிலையும் இதை ஒட்டி இந்திய நாடாளுமன்றத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் காட்டிய எதிர்ப்பும் ஆக எழுந்த புதிய சூழல்தான் இந்தியப் பிரதமர் அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்ற அறிவிப்பு. இந்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு தலைவர் கலைஞர் தான் காரணம் என சுவரொட்டி ஒட்டப்பட்டிருப்பது தமிழக மக்களை தி.மு.க. பட்டப்பகலில் ஏமாற்றும் மோசடித்தனமாகும் இந்த மார்ச் மாத முதல் வாரத்தில் 5 மாநில சட்டமன்றங்களுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் பலத்த அடி வாங்கி இருந்தது.சோனியாவின் மொத்த குடும்பமும் உத்திரபிரதேசத்தில் முகாமிட்டும் காங்கிரஸ் அங்கு பலத்த பின்னடைவை சந்தித்தது.அவமானத்தை எதிர் கொண்டது. சேனல் 4 ஒளிபரப்பினால் இலங்கையின் போர்குற்றத்தை உணர்ந்து மொத்த உலகமே குறிப்பாக தமிழகம் அதிர்ந்தது.மார்ச் இரண்டாம் வாரத்தில்இந்திய நாடாளுமன்றமும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களால் அதிர்ந்தது. போருக்கு பிந்தைய 3 ஆண்டுகளில் சிதைக்கப்பட்ட இலங்கை தமிழ் மக்களுக்கு ஏதும் செய்யாமல் ஏமாற்றும் இலங்கைக்கு இந்தியா முட்டு கொடுக்கக் கூடாது.இந்தியா தனது ஆழ்ந்த உளப்பூர்வமான அரசியல் நெருக்கடியை இலங்கைக்குத் தரவேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்),இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,அ.தி.மு.க, தி.மு.க ,விடுதலை சிறுத்தை,தமிழக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரே நோக்கோடு முழங்கினர். அடுத்த சில நாட்களில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் கடுமையான கண்டனத்திற்கு மக்கள் மத்தியிலும்,நாடாளுமன்றத்திலும் உள்ளானது. 25 % கும் மேலான.கடுமையான கட்டண உயர்வு. மம்தா போன்ற கூட்டணி தலைவர்களே நியாயம் செய்ய முடியாத கட்டண உயர்வு.கட்டண உயர்வுக்கு காரனமான தன் கட்சியைச் சார்ந்த ரயில்வே அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்ல அவர் மறுக்க,கூட்டணி அரசுக்கான ஆதரவை தான் திரும்பப் பெறப் போவதாக மத்திய அரசை அச்சுறுத்தினார். ,ஜெயலலிதாவும் கட்டண உயர்வைச் சாடினார்.மார்க்சிஸ்ட் கட்சி மார்ச் 27 அன்று தமிழ்நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இப்படி இந்திய அளவில் கடுமையான அரசியல் நெருக்கடிகளால் மன்மோகன்சிங்,சோனியா சுற்றி வளைக்கப்பட்டு,கூட்டணி கட்சிகளும் இதுதான் நேரம் என்று அச்சுறுத்த ,ஆசிய ,அய்ரோப்பிய அளவிலும் இந்தியாவின் முகம் மேலும் சேதமடைய,தப்புவதற்கு வேறு வழி இல்லை என்ற போதுதான்,அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க விரும்புவ்தாக மன்மோகன் சிங் அறிவித்தார். ஆனால் தன்னால்தான் வைகுந்தம் கவிழ்ந்தது என சென்னையில் சுவரொட்டிகள் ஒட்டிக் கொள்கிறார்கள். கூரை மேலேறி கோழி பிடிக்க வக்கில்லாத உளுத்தம் பருப்புகள்

1 comment:

  1. The Best Slots | Casino Roll
    The best 카지노 사이트 slots 개집 왕 at Casino Roll. If you love table games, to play blackjack, you have to bet twice for 메리트 카지노 조작 the dealer to win. The 우리 카지노 dealer gri-go카지노 사이트 must

    ReplyDelete