Wednesday, August 10, 2011

துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன்-அச்சுறுத்தல் மீதான சொல்லாடல்

கடந்த ஜூலை 2011 புதுவிசை இத்ழில் யோ.கர்ணன் என்பவர்(முன்னாள் புலி) துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன் என்ற புனை கதை ஒன்றை எழுதி இருக்கிறார்.இந்த கதையை வெளியிட்ட காரணத்திற்காக ஆதவன் தீட்சன்யா தொலைபேசி மூலமாக அச்சுறுத்தபட்டு வருகிறார்.அச்சுறுத்தல் காரர்களிடம் மறுப்பை தந்தால் வெளியிடுவ்தாக சொன்ன பின்பும் அச்சுறுத்தல் தொடர்கிறது.தனக்கு ஒவ்வாத கருத்து ஒரு இத்ழில் வெளியானால் அதற்கான மறுப்பை,விளக்கத்தை அதே இத்ழில் வெளியிட கோரலாம்;வெளியிட வேண்டும்.மாறாக மத்வாதிகள் போல அச்சுறுத்துவது வீட்டுப் பெண்களை பயமுறுத்துவது அவர்கள் தரப்பு கருத்துக்கு அழகில்லை


                                                                            2
சரி கதை என்ன?முள்ளிவாய்க்கால் சண்டைக்கு பிறகு இறந்துபட்ட பிரபாகரன் சடலத்தை,அவரின் பிஸ்டலை மாறி மாறி தொலைகாட்சிகள் காட்டிக் கொண்டிருக்க பிரபாகரன் மன்னார் வழி ராமேசுவரம் வந்து சென்னை வழியாக தாய்லாந்து சென்றுவிட்டார்.அடுத்தக் காட்சியில் முகாமிலுள்ள குறிப்பிட்ட வீட்டை ராணுவம் நெருங்கி பிரபாகரன் மகள் துவாரகாவை கைது செய்து விசாரிக்கிறது.விசாரணையில் இந்த பெண் வேலுப் பிள்ளை பிரபாகரனின் மகள் அல்ல என ராணுவம் முடிவிற்க்கு வருகிறது.


                                                                                3
தாய்லாந்திலிருந்து மீசைப்பிள்ளை பிரபாகரன் பிரித்தானிய எம்பசிக்கு விசா கேட்டு மனு செய்ய ,எம்பசிக்கு சந்தேகம்;இவர் அவரா?இவரா? இந்த மீசைப்பிள்ளை பிரபாகரன் விளக்க மனுவில் தான் மிக்சர் கம்பெனி பிரபாகரன் என்க,விசா மறுக்கப்படுகிறது
                                                                               4
அவுஸ்ரேலியா விசா கிடைத்த மகிழ்வில் மகளுக்கு போன் போட்டு உங்களையும் கூப்பிட்டுக் கொள்கிறேன் என சொல்ல,மகள் நாங்க நாட்டை விட்டு வர விரும்பவில்லை என,பிரபகரன் நாடும் மசிரும் என்கிறார்.


                                                                               5
இதுதான் கதை.போருக்கு பின்பு இதுவரை சொந்த ஊருக்கு முழுதாக செல்ல முடியாமலும்,ராஜபக்சேவின் அராஜகத்தால் பீடிக்கப்பட்ட தமிழர்கள் ஆற்றொணா துயரத்திலும் வாழும் சூழலில் போர் குறித்தும் புலிகள் குறித்தும் எதிர்மறை கருத்தோடு கோ.கர்ணன் எழுதியிருக்கவே கூடாது.இலங்கை அரசோடு இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில் தமிழர்கள் இருக்கும் போது இந்தக்கதை தமிழர்களுக்கு கெடுதலே செய்யும்.இப்பொது தேவை இலங்கை அரசை சம உரிமை,சமவாய்ப்பு,சுயாட்சி த்ர நிர்ப்பந்தம் செய்வதே ஆகும்.


                                                                                      6
2009 மே 16 வரை முள்ளிவாய்க்கால் போரில் புலிகள் தரப்பில் ஈடுபட்டு ஒரு காலை இழந்த கர்ணன் இந்த கதையை எழுதிஇருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள இயலாது.முன்னர் வைத்திருந்த நம்பிக்கைக்கு மாறாக சென்று புலிகளை இகழ்வது மட்டுமின்றி மறைமுகமாக இலங்கை அரசுக்கு துணை போகும் தொனியில் எழுதி இருக்கிறார்.
                                                                                 7
அச்சுறுத்தியவர்கள் கதை எழுதிய கர்ணனை விமர்சிக்கலாம்.ஒரு முன்னாள் போராளி சமகாலத்தில் மனம் பிரழ்ந்து இம்மாதிரியான படைப்பை தந்ததை கண்டிக்கலாம்.அல்லது கதை வெளியான இதழுக்கு ஒரு கண்டன அறிக்கை தரலாம்.இதை எதுவும் செய்யாமல் ஆதவன் மீது,அவர் வீட்டு பெண்கள் மீதும் அச்சுறுத்தல் நிகழ்த்தியது கண்டனத்திற்க்கு உரியது.நாகரீகமற்றது;சனநாயக தன்மை அற்றது.அச்சுறுத்தலாளர்களே கொஞ்சம் அவதானியுங்கள்

No comments:

Post a Comment