Sunday, March 27, 2016

நாடகமும் நானும்

நான் ஒன்பதாம் வகுப்பு ( 1975)படிக்கும் பொழுது தாயின் மடியில் என்றொரு நாடக ஸ்கிரிப்ட்  எழுதினேன். இன்று யோசித்துப் பார்க்கும் பொழுது அதனினும் பல ஆண்டுகள் முன்பு( 1968) ,எங்கள் ஊர் ஆரல்வாய்மொழியில் வசன மட கோவில் அருகே நடைபெறும் கட்சிப் பொதுக்கூட்டங்களில் இடம் பெறும் , நாடகம்,பாடல் நிகழ்வு போன்றவ்ற்றைப் பார்த்ததன்  பாதிப்பாக கூட இருக்கலாம்; நான் என் பதினான்காம் வயதில் நாடகம் ஒன்று எழுதியது.

பின் பத்தாம் வகுப்பு( 1976) படிக்கையில் ஆண்டு இறுதிப் பள்ளிப் போட்டியில்  பிச்சைக்காரன் வேடம் போட்டு,நானே ஒப்பனை செய்து கொண்டு,மேடையில் தோன்றி நடித்தேன். என் இருபத்தோராம் வயதில்( 1982) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிமுகம் ஏற்பட்டு, அதன் சார்பான அமரர் ஜி.எஸ் மணி கலைக்குழு என்ற கன்னியாகுமரி மாவட்ட  குழுவில் நான் இணைந்து கொண்டு, மாவட்ட்ம் முழுவதும் வீதி நாடத்தை நடத்தி நடித்துக் கொண்டிருந்தேன்.

பின் சென்னை வந்து, 1989 ஆம் ஆண்டு , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு ஒட்டிய பிரச்சாரத்திற்கான கலைக்குழுவிற்கான தேடலில் சென்னையில் இருக்கும் நாடக குழுவிற்கான நாடக அரங்கேற்றம் நடந்தது. நான் வடசென்னை நாடகக்குழுவினை உருவாக்கிப் பொறுப்பேற்று அந்த அரங்கேற்றத்தில் குழுவுடன் பங்கேற்றேன்.

பின் அமைப்பு சார்ந்த களப்பணியில் தீவிரமாக இயங்கியதால் நடிப்பதில் இருந்து விலகினேன். ஆனாலும் இன்று வரை வடசென்னையில் நிகழும் நாடக பட்டரைகளில் பங்கு பெற்று, பொறுப்பு வகித்து, பரப்புரைக்கான குழுவிற்கு பயிற்சி அளிப்பதில் உதவி செய்து வருகிறேன்.வரும் ஏப்ரல் 1,2,3 தேதிகளில் ஐந்து குழுவிற்கான பயிற்சி அளிக்கும் பணியில் ஆயத்தப் பணிகளை செய்து வருகின்றோம்.

இது  என் நாடக அனுபவத்தை எழுதிப் பார்ப்பதற்கான ஒரு சிறு குறிப்புகள்தான்.பல சுவையான அனுபவங்கள் ,
திடுக்கிடும் நிகழ்வுகள் எல்லாம் உண்டு.பின் விரிவாக எழுதிப் பார்க்கலாம்.
-மார்ச் 27 உலக நாடக தினத்தை ஒட்டி எழுதியது.

No comments:

Post a Comment