tag:blogger.com,1999:blog-1603068537305995356.post389472599230260608..comments2023-10-25T13:11:27.334-07:00Comments on திசைச்சொல்: பேசாப் பொருளை பேசிய பாரதி-4திசைசொல்http://www.blogger.com/profile/17375050576050024490noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1603068537305995356.post-7182426085787196622011-09-29T02:25:49.389-07:002011-09-29T02:25:49.389-07:00காவ்யா
பயனற்ற ஆங்கிலக்கல்வியைப் பற்றி தன் சுயசரி...காவ்யா <br /><br />பயனற்ற ஆங்கிலக்கல்வியைப் பற்றி தன் சுயசரிதைப் பாத்தொடரில் எழுதியதாக எனக்கு நினைவு. அதையேன் தடைசெய்தார்கள்? சுயசரிதை முழவதும் தடை செய்தார்களா ? அல்லது சில பகுதிகள் மட்டும்தானா ?<br /><br />பாடலும் குழப்பத்தைத் தருகிறது. ஆங்கில வழிக்கல்வி முறையைக் குறிப்பிடுகிறாரா ? இல்லை ஆங்கில மொழி என்ற ஒரு பாடத்தை மட்டும் குறிப்பிடுகிறாரா ?<br /><br />ஆங்கில மொழிப்பாடத்தை அவர் குறை சொல்வது நியாயமற்றது. அம்மொழியால் அவர் பெற்ற இன்பமும் பலனும் நிறைய. ஷெல்லியில் கவிதைத்தொகுப்பு நூலை தன் கோட்டுப்பாக்கெட்டில் வைத்தே திரிந்தவரும் தன்னை ஷெல்லிதாசன் எனப் பெருமையுடன் அழைத்துக்கொண்டவரும், பின்னாளில் மேனாட்டுப் பத்திரிக்கைகளில் வெளிவந்து கொண்டிருந்த மேனாட்டறிஞர்களில் முற்போக்கான கருத்துக்களை தமிழில் மொழிபெயர்த்து அன்றாடம் வெளியிட்டுவந்தவரும், பெண்ணுரிமை, பெண்ணியம் என்றெல்லாம் மேனாட்டுக்கொள்கைகளால் கவர்ந்து அதை நம்நாட்டுப்பெண்களுக்கும் அளிக்கவேண்டுமென இன்னாட்டு சமூகத்தைப்பகைத்துக்கொண்டவர் இப்படி எழுதுவது என்ன நியாயம்?<br /><br />இந்த ஆங்கில வழிக்கல்விக்கு இவர் சொல்லும் மாற்று என்ன தெரியுமா ? அதை நீங்களே அவரின் சுதேசமித்திரன் கட்டுரைகளில் படித்துத்தெரிந்து கொள்ளுங்கள்.<br /><br />ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொளல் நலம். பாரதியின் முற்போக்குக்கருத்துகள் அவரின் ஆங்கிலவழிக்கல்வியாலே வந்தது.திசைசொல்https://www.blogger.com/profile/17375050576050024490noreply@blogger.com