Thursday, May 25, 2017

கூடற்றக் குயில் : நா.காமராசன்


இருபத்து மூன்று வயதில் ,  இரண்டாயிரம் ஆண்டு (இலக்கிய ஆதாரம் கிடைத்தபடி)  வரலாற்றுப் பெருமை உடைய தமிழ்க்கவிதையை , மரபை யாப்பை அறிந்து , அதன் கதி மாற்றி , போக்கு மாற்றி , பொருள் மாற்றி , திசை மாற்றி விட்ட , பாரதிக்குப் பிறகான முதல் விதை , புதுக்கவிதையின் அரசன் நா.காமராசன்.

   வயலார் ராமவர்மா, கலாநிதி கைலாசபதி,காண்டேகர் போன்ற மானுடநேயம் கொண்ட இடதுசிந்தனை கொண்ட படைப்பாளிகளின் படைப்பில் உதவேகம் பெற்று, தமிழண்ணல்  வழிகாட்டலில் படிமமொழி பழமொழி கற்று, இருபதாம் நூற்றாண்டின் புதுக்கவிதைக்கு புதுப்பாதை அமைத்தவர் காமராசன்.

 இளவயதில் தமிழ்க்கவிதைப் போக்கை மாற்றி அமைக்க வேண்டுமானால், தமிழின் கடந்த கால கவிதையை , அதன் வரலாற்றை , ஆழங்கால் கண்டு மொழியில் கவிதையில் தோய்ந்து போய் , சமுகத்தை உற்றுப் பார்த்து , புதுச்சூரியனாக பிறப்பதன் வழியாகவே  சாத்தியமாகி இருக்க வேண்டும்.

 சாத்தியமாக்கி இருக்கிறார்.

சாத்தியத்தை  தொடர்ந்து வடிவிலும் பொருளிலும் முன் செலுத்துவதற்கு மாறாக வடிவில் படிமத்தில் அழகியலில் மட்டுமே பயணம் என்று குறுக்கி தொடர்ந்ததன் விளைவு , வானம்பாடிகளின் வானத்திலிருந்து விலகிப் போய், மு.கருணாநிதி, எம்.ஜி.இராமச்சந்திரன் புகழ் பாடி, கூடற்ற குயிலாகிப் போனார் நா.கா
(தொடரும் )

No comments:

Post a Comment