மீன்கறிக்கு உமிழ்நீர் சுரக்கிறது குழந்தை
வாங்கிட ஆளின்றி கொண்டு வந்த மீனைக்
கொண்டு போகிறான் வேலப்பன்
வறள் உப்பு வாசக் காற்று
பெட்ரோல் கவிச்சியை கொண்டு சேர்க்கிறது
மீன்சந்தை தோறும் கண்ணீர்கதையாடல்
கடற்கறையில் கசிந்துருகிக் கிடக்கிறது வாலிபம்
விபத்தா சதியா மீவெளிப் பகிர்வுகள் பார்வைக்கு வருகின்றன
கப்பல் மீது குற்றப்பத்திரிகை உண்டா
எழுகின்றன கேள்விகள்
சுவாசச்சிக்கலால் இறந்து மிதக்கின்றன கடலினங்கள்
இருந்து தொலைக்கின்றன அரசுகள்
No comments:
Post a Comment