90 களிலிருந்து நான் THE HINDU வாசகர். தி இந்து தமிழ் தொடங்கிய பின் , தமிழ் இந்துவை தொடர்ந்து வாசித்து வருகிறேன். இதன் , சமஸ் கட்டுரைகள், இலக்கியம், சினிமா, பெண்கள் பகுதியை ரசித்து வருகிறேன். நடுப்பக்க கட்டுரைகளை அதன் தேவை அவசியம் என கருதினால் படித்து வருகிறேன். இன்றைய 24.01.2017 இந்து தமிழ் வாசித்தேன்; அதிர்ச்சி அடைந்தேன். ஜல்லிகட்டுக் கோரி கடந்த ஒருவாரமாக சென்னை மெரினா கடற்கரை தொடங்கி தமிழ்நாடெங்கும் நடந்த மாணவர்களின் அமைதியான போராட்டம், நேற்று தமிழ்நாட்டு போலிசால் சென்னை போலிசால் தமிழ்நாட்டு அரசால் , ரத்தச்சகதியில் வன்முறையில் முழ்கடிக்கப்பட்டிருக்கிறது. இதனை சன் டிவி, நியூஸ் 18 போன்ற தொலைக்காட்சிகள் , தீக்கதிர் நாளேடு விரிவாகக் காட்டி எழுதி இருக்கின்றன
https://theekkathir.in/2017/01/23/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF
இன்றைய தமிழ் இந்துவில் வெளியாயிருக்கும் செய்திகள், படங்கள் அமைதியாகப் போராடிய மாணவர்களை சமுகவிரோதிகள்,கலவரக்காரர்கள் என்றே அழைக்கிறது. அது வெளியிட்டப் படங்களில் ஒரு பக்கம் மாணவர்கள் தாக்குகின்ற படங்களை வெளியிட்டிருக்கிறது. அடுத்தப் பக்கத்தில் போலிஸ் தாக்குகின்ற படங்களை வெளியிட்டிருக்கின்றது.அதன் கடைசிப்பக்கம் கட்டுரை ஆர்.சிவா என்பவரின் பெயரில் வெளிவந்திருக்கின்றது. அந்தக் கட்டுரை அப்பட்டமான போலிஸ் கொடுத்த செய்தியாக , போலிஸ் ரிப்போர்ட்டாக வந்திருக்கின்றது. சமுகவலைத்தளங்களில் பொதுமக்களின் சொத்திற்கு போலிஸ் செய்த நாசங்கள் , வைத்த தீ , வீடியோவாக பகிரப்பட்டு வருகின்றன. இது எதுவும் இந்து தமிழில் இல்லை
https://www.youtube.com/watch?v=MD31jBup2Xc
கடைசிப்பக்க கட்டுரையில் போலிஸ் அப்பாவிகள் போலவும் மாணவர்களை கலவரக்காரர்கள் என்றும் சமுக விரோதிகள் என்றும் குறிப்பிட்டு சிவா பெயரில் போலிஸ் ஆதரவு செய்தி அரைப்பக்கம் வந்திருக்கின்றது. தலையங்கமும் இவ்வாறே மொண்ணையாக எழுதப்பட்டுள்ளது. ரஜினி, கமல் அறிக்கைகளும் பொதுப்பார்வை பார்த்து, மாணவர்களின் பக்க நியாங்களை மறுக்கின்றன. 6 நாட்கள் அமைதியாக நடந்த மாணவர்கள் போராட்டத்தில், திடீரென்று எப்படி சமுக விரோதிகள் புக முடியும் ?. அவர்கள் எவ்வாறு கலவரக்காரர்களாக மாறினர்?
அரசின் அவசரச்சட்டத்தை அமைச்சர் வழியாக அல்லது நீதிமான்கள் அரிபரந்தாமன், சந்துரு போன்றவர்கள் வழியாக திரண்டிருந்த மாணவர்களுக்கு தந்து படிக்கச் செய்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டு அரசு, சட்டமன்றத்தில் அறிவித்திருந்தால் மாணவர்கள் அமைதியாக அரசின் வேண்டுகோளை ஏற்று, போராட்டக்களத்தை விட்டுச் சென்றிருப்பார்கள்.அரசு அவ்வாறு செய்யாமல் சட்ட ஒழுங்கு பிரச்சினையாக கருதி போலிஸ் அறிவிப்பு வண்டி வழியாக போலிஸ்காரர்கள் பேசினால், எப்படி மாணவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்?
17 ஆம் தேதி இருந்த உணர்வு அல்ல மாணவர்களின் 23 ஆம் தேதிய உணர்வு. அரசு போட்ட கணக்கென்ன? இது சில சினிமா ஆட்களால், சில ஆர் ஜேக்களால் என்.ஜி.ஓக்களால் திரட்டப்பட்டக் கூட்டம். அவர்கள் அரசின் சொல்லை கேட்டு போராட்டத்தை கைவிட்டதைப் போல மாணவர்கள்&இளைஞர்கள்&பெண்கள் போராட்டத்தை கைவிடுவார்கள் என்று அரசு நினைத்திருக்கிறது..மேற்சொன்ன நபர்களால் முதல் நாள் திரண்டு வந்தாலும், வந்தவர்கள் முழு உணர்வு கொண்டு, ஜல்லிகட்டு தேவை என்றும், இதற்கான முழு அரசுச்சட்டம் தேவை என்றும் பீட்டா PETA எதிர்ப்பு உணர்வோடும் வந்த தமிழ்க்கூட்டம். சொந்த செலவில் திரண்ட கூட்டம்.
களத்திற்கு வரச்சொன்னவர்கள் அரசின் கைக்கூலிகளாகப் போன பிறகு, தமிழ் உணர்வோடு திரண்ட கூட்டம் எவ்வாறு , தம் பண்பாட்டுக் கோரிக்கையை கைவிட்டு கலைந்து போகும்? இந்த உணர்வோடும் அரசு சட்டத்தின் மீதான சந்தேகத்தோடும் கலையாமல் இருந்த மாணவர்கள், இளைஞர்கள், பெண்களோடு அரசு பேசாமல் , அரசின் கைக்கூலிகள் அழைத்தால் வரவேண்டும்; அவர்கள் கைவிட்டுப் போனால், மாணவர்களும் கைவிட்டுப் போகவேண்டும் என்று நினைப்பதற்கு இது ஒன்றும் ராகவா லாரன்ஸ், ஹிப் ஹாப் ஆதியின் சினிமா சூட்டிங் அல்ல.ஆர்.ஜே பாலாஜியின் மொக்கை காம்பியர் வேலை இல்லையே?
130 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியம் கொண்ட இந்து குழுமம் அணுகி நுணுகிப் பார்த்து, மக்கள் தரப்பில், மாணவர்கள், இளைஞர்கள் தரப்பில் நியாயத் தரப்பில் நின்று செய்திகள் வெளியிட்டிருக்க வேண்டும்.இப்படி அரசின் போலிசின் தரப்பில் நின்று செய்தி வெளியிட்டிருக்கக் கூடாது.
பின்னூட்டங்களை கோருகிறோம்
ReplyDeleteஉண்மை சகோ!
ReplyDeleteThe Hindu should get the feedback from the student community and bring it to the public. It is very clear that the Central and the state governments are trying to break the spirit of the youth. If you can't publish the truth, please refrain from your comments.
ReplyDelete