Friday, July 10, 2015

உள்ளூர் வரலாற்றைப் பாதுகாப்போம்







போன சனி(ஜூலை 4)  அன்று பழவேற்காடு போய் வந்தோம்.அங்கு நடைபெற்ற சென்னை திரைப்படசங்க பயிலரங்கு பற்றி தனியே வலைப்பூவில் எழுதுவேன்.

இங்கு நான் சொல்ல வருவது, பொன்னேரியிலிருந்து பழவேற்காடு வரை செல்லும் 19 கிமீ பயணத்தில்,வழியெங்கும் சின்ன சின்ன ஊர்கள்.அந்த ஊர்களின் பெயர்கள் அழகான தமிழ்ப்பெயராக இருக்கின்றன.அவைகள் பண்புப்பெயர்களாக,காரணப்பெயர்களாக,இடுகுறிப்பெயர்களாக இருக்கின்றன

ஊர்களின் கடையெங்கும் சொந்தப் பண்பாட்டினை ஊனப்படுத்தும் பன்னாட்டுக் கம்பெனிகளின் குளிர்பானங்கள்,  முகப்பில் கட்டிவிடப்பட்டிருக்கின்றன.கழகங்களின் நிறம் உதிர்ந்து போன கொடிக்கம்பங்கள் அங்கு என்ன அரசியல் நிலவுகிறது என்பதை உணர்த்தி நிற்கின்றன.

 எனக்கு வந்த விசனம் என்னவெனில்,


பழவேற்காடு,காஞ்சிவாயல்,நடுப்பாலை,தொட்டிமேடு,காவல்பட்டி,சின்னகாவனம்,பொன்னேரி என்று இலங்குகின்ற ஊர்களை,அந்தந்தப் பெயர்களின் ஆதிக்காரணம் அறிந்து,அந்த மக்களுக்குஅந்தந்த ஊர்களின் சிறப்பைச் சொல்லி, ஊரையும் பெயரையும் தம் சொந்த பண்பாட்டினையும் (சாதி-மத பண்பாடு அன்று) பாதுகாக்க வேண்டி அந்தந்த ஊர் பஞ்சாயத்து நிர்வாகம் ,அங்கிருக்கும் தமிழ் ஆர்வலர்கள் முன்வரவேண்டும்.

தெருவின் பெயரை புதியாய் எழுதி வைக்கிறோம் என இயங்கும் அரசு,இப்படியான ஊர்களின் பெயரையும் பண்பாட்டினையும் ஆயும் பொருட்டு நிதி ஒதுக்கி,அந்தந்த ஊர்களில் இது சார்ந்த நூலகம் ,ஆவண காப்பகம் அமைத்து சொந்த உள்ளூர் பண்பாட்டு தரவுகளை பாதுகாக்க முன் வரவேண்டும்.

No comments:

Post a Comment