Tuesday, March 31, 2015

உயிரச்சம்










உங்களின் துப்பாக்கிகள் நின்று கொல்லும் வறுமையை நோக்கிக் 
குறி வைத்திருக்கின்றனவா?

உங்களின் பத்வாக்கள் பாலின்றி குழந்தைகளைச் சாகவிடும்
ஆயுதவியாபரிகள் மீது பாய்ந்தது உண்டா?

தேவாலயங்களின் மன்றாட்டல்களும் ஆராதனைப்பலிகளும் 
வெள்ளை மாளிகையை என்ன செய்து விட்டன?

மினராக்களின் பாங்குகளை பெண்கள் நடத்த வழி விட்டு நின்றீர்களா?

மனம் பிசகிய இளம்பெண் உடல்மீது ஏறிக் குதித்து 
உயிர் பறிக்க முகமதுநபி ஆணையிட்டாரா? 

ஓசோன் படலத்தைக் கிழித்து சுற்றுச்சூழலை மாசாக்கும் 
 அமெரிக்க,ஐரோப்பிய அரசுகளை  போப்பாண்டவர் 
என்ன செய்து கிழித்து விட்டார்?

சன்னி,ஷியா,குர்த்து என்று பேதம் பிரிக்கும் 
இராக் சிரியா கொலைவாதிகளே 
ஒரு தொப்புள் கொடியில் பிறந்ததை மறந்து 
உங்கள் உடலங்களையும் பேதம் கொண்டு கிழித்து எறிவீர்களா ?

நீண்டது  ஒரு  நிழற்படமெடுக்கும் கருவி என அறியாமல் 
கண்ணீர் மன்றாட்டு நடத்தும் குழந்தைகளா 
உங்கள் கொலை இலக்குகள்? 

 நீங்கள் தனி நாடு பிடித்து எதைச் சாதிக்கப் போகிறீர்கள்? 

ஆஃப்ரிக்கா  தென் அமெரிக்கா ஆஃப்கனிஸ்தான் போல
ஓபியம்  மெப்பிட்ரோன் வயகரா கஞ்சா என நீங்களும்
உற்பத்தி செய்வீர்கள் அல்லது செய்ய வைக்கப்படுவீர்கள்


 உங்களின் மார்க்கங்களும் புனித நூல்களும்  வாழ்க்கைக்கான திறவுகோலாக நிச்சயம் இருக்கப் போவதில்லை என்றே 
வரலாறு நெடுக சாட்சியங்கள் பதிவாகி இருக்கின்றன 

ஐ. எஸ் ,அல்கொய்தா, ஆர்.எஸ்.எஸ், பெண்டகன் போன்ற  பெயர்கள் 
ஒரு சரக்கின் வெவ்வேறு வணிக முத்திரைகள் என்றே அறிவோம் 

பிஞ்சுகளின் மனதில் உயிரச்சம் விளைவிக்கும் 
உங்கள் முகம் பூசிய ஒப்பனைகள் கிழிபட 
உங்கள் வார்த்தைகள் வகுந்து பொய்தனை  நிரூபணமாக்கிட

மானுடத்தின் தூதுவர்களாய் மகரந்தங்களின் வாரிசுகளாய் 
  நாங்கள் இருக்கிறோம் ;ஆம் நாங்கள் இருக்கிறோம் 



4 comments:

  1. coward people.....making innocent people afraid of u does not makes u strong

    ReplyDelete
  2. அருமை நண்பரே சவுக்கடி வார்த்தைகள்.
    நேரமிருப்பின் எமது குடிலுக்கும் வருகை தரவும்
    தங்களின் பூவில் என்னையும் இணைத்துக்கொண்டேன்.
    அன்புடன் - கில்லர்ஜி

    ReplyDelete
  3. powerful words than the guns- meaningful lawyer's argument- it has only justification of man kind for which no body can reply to those questions- heart touching photo (after Hiroshima/Nagasaki- naked one child running for survival)- you are a fine writer to be known by all - vimala vidya

    ReplyDelete