Thursday, February 26, 2015

கணங்களின் தோற்றம்





-1-
கனவுகளில் உயர்ந்தெழும்
வீர நாச்சியாளின் நெடுவாள் முனை
உன் கண்களை பிரதிபிம்பம் செய்து கொண்டிருக்கின்றன
சில கணங்களினூடாய் தோற்றம் கொள்ளும் உன் முக இறுக்கமும்
 நாச்சியாளையே ஒர்மை செய்து கொண்டிருக்கிறது!

-2-
கன்னக்குழிச் சிரிப்பில்
சிக்குண்டு நான் கிடக்க
பெருவரம் வேண்டும் சகியே சகியே!

-3-
 ஆழப் பெருங்கடல் ஆயினும்
உன் மடிதானே அதன் புகலிடம்!

-4-
திசைப்பறவைகள்
ஒரு பொழுதும்
திக்கற்றுக் கிடப்பதில்லை!

-5-
வளர்பிறை
உன் குறுநகை!

-6-
அடர்ந்து பெய்யும் பனியும்
உன் அன்பையே ஞாபகப்படுத்துகிறது!








No comments:

Post a Comment