Tuesday, February 24, 2015

இயக்குநர் ஆர்.சி.சக்தி



மனிதரில் இத்தனை நிறங்களா? சிறை,கூட்டுப்புழுக்கள் என்று வந்த 
அவரின் படங்களைப் பார்த்து,அவர் மீது மரியாதை வந்த காலம் அது.
தர்மயுத்தம் படம் பெருவெற்றி பெற்றதோடு,அந்த தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு என்று வரும் மலேசியாவின் பாடலை எங்கு கேட்டாலும் உணர்வலை புரளும் படத்தை தந்தவர்.
அவரை 96 வாக்கில் சாய்நகர் வீட்டில் பல முறை சந்தித்து பேசியிருக்கிறேன்.
சினிமாவின் சாயலை எப்போதும் சொந்த வாழ்வில் படிய விடாத எளிய மனிதர்.
அவரின் பிள்ளைகளும் அப்படியே.என் வழியாக பல ஊர்களின் கலைஇரவிற்கு வந்து மனசில் உள்ளதை பளிச்சென்று பேசி மனங்களைக் கவர்ந்தவர்.
அவரின் மறைவிற்கு அஞ்சலியும் வணக்கமும்

No comments:

Post a Comment