Monday, April 23, 2012

ஈழம் குறித்த அருள் எழிலனின் கோக்கு மாக்கு கூத்து



இராதெ முத்து :கொக்க மக்கா கோக்கு மாக்காலா பேசுது
மத்திய தரைக்கடல் வழியாக வந்த ஆரிய ரத்தம் கலவாத சாதியா நாமு?எழிலு சோக்கு சொல்லாதமா

//இப்போது அந்த மக்களுக்கு தேவை சுவாசமே, வாழ்வில் எல்லாவற்றையும் அவர்கள் இழந்து விட்டார்கள் அவர்கள் அதை மீளப்பெற வேண்டும் புதிய வாழ்வை துவங்க வேண்டும் என்பதால் // இதை நீங்கள் உணரும் முன்பே பேசியது மார்க்சிஸ்ட்.நணப மறதி நோயின் குறி.

தமிழ் ஈழம் கேட்கும் நண்பர்களை ஒருமையில் நாங்கள் என்றும் பேசியதில்லை.இங்கு உங்கள் வார்த்தையில் பொங்கும் வன்மம் உங்கள் பண்பாடற்ற,விவாதிக்க அஞ்சுகிற,மொன்னை ஆயுதத்தோடு விவாதிக்கத் தெரியாத உங்கள் இயலாமையைதான் காட்டுகிறது குரூப் ஆப்பு எழில்

போர்களத்திற்கு வெளியே நின்று பிதற்றுவது என்ன தனம்?ஈழம் ஒன்றே தீர்வு எனில் 2009 மே 18
வரையிலான போரின் தன்மை இப்படி கையறு நிலையில் போய் முடிந்து இருக்காது.மக்கள் யுத்தமாக பொங்கி பூத்திருக்கும்.யாரின் வசவுகளுக்கும்,பூரிப்புகளுக்கும் அப்பாற்பட்டது மக்கள் போர்.

மக்கள் போராக மாறி போயிருந்தால் நிலைமை இப்படி இருந்திருக்காது.உயிர் பயம் அறியாது விடுதலை போராட்டம்.தன் வலி,பிறர் வலி தெரியாமல்,காலம்,சூழல் அறியாத ,தமிழ் மக்கள் யாவரையும் இணைக்கத் தெரியாத ஒரு தலைமையின் சோகம்,மொத்த மக்களின் சோகமாக போய்விட்டது

.இரண்டாம் உலகப்போரில் தாயகத்தை காப்பாற்ற பொங்கி எழுந்த சோவியத் ,71 களில் அமெரிக்க தலையீட்டை எதிர்த்து சினந்த வீர வியட்நாம் போரும் தோற்காதன் காரணம்,அது மொத்த மக்களின் போராக மாறியதால்.ஒரு பெரும் நோக்கு சிலரின் சவடாலாக போய்விடக்கூடாது என்பதே நம் கவலை.

தனிநாடுதான் தீர்வு எனில் அம்மக்களின் போராட்டம் பலவடிவம் பெற்றிருக்குமே தொடரும் பாலஸ்தீன போர் போல:நீடிக்கும் ஈராக் மோதல் போல.இன்று நம் ஈழ மக்களுக்கு தேவை உத்திரவாதம் இல்லாத சவடால்கள் அல்ல.அவர்களின் நிலம்,அவர்களின் வாழ்வுரிமையை அவர்களுக்கு கிடைக்கச் செய்வதே உடனடித் தேவை.தேவை என்னவோ அதற்கான முழக்கம் வைத்தால் மட்டுமே வெல்ல முடியும்.எங்கோ கை நீட்டி விட்டு,கூலிக்கு மாரடிப்பது வேண்டாம்.

வாருங்கள் ஒன்றாய் போரடுவோம்.இலங்கை மீதான போர் குற்ற விசாரணைக்கு,சர்வதேச தரத்திலான,நம்பகத் தன்மை வாய்ந்த குழுவை அமைக்கக் கோருவோம்.மக்கள் வாழும் பகுதியிலிருந்து ராணுவத்தை திரும்ப பெறக் கோருவோம்.சம உரிமை,சரிநிகர் வாழ்வு கேட்டு ,முழங்குவோம்.இலங்கையிலும் சனநாயக உரிமைக்கான போராட்டங்கள் நடைபெறட்டும்

No comments:

Post a Comment