Wednesday, January 11, 2012

புத்தகத்தோடு வாழும் பொழுதுகள்

புத்தகத்தோடு                                  
வாழும் பொழுதுகள்
வசீகரமானது

ஒலி
ஒளி
எண்மம் என
எத்தனை வடிவம் வந்தாலும்
புத்தகத்திற்கான தேவை
இருந்து கொண்டே இருக்கும்

எழுத்து
சொல்
பொருளில்
ஒவ்வொரு படைப்பும்
கற்பனைக் கதவுகளை
திறக்கும் சாத்தியத்தால்
புத்தகத்தின் பயணம்
தொடர்ந்து கொண்டே இருக்கும்

ஒவ்வொரு சொல்லும்
மணப்பதற்கும்
ஒவ்வொரு காதலும்
வெல்வதற்கும்
ஒவ்வொரு மனதை
மர்ற்றுவதற்கும்
ஒவ்வொரு நொடியில்
வாழ்வதற்கும்
புத்தகம் ஒன்றே
கடவுச்சொல்
புத்தகம் ஒன்றே
திறவுகோல்

No comments:

Post a Comment