Sunday, December 18, 2011

பேசாப் பொருளை பேசிய பாரதி-16


புனைவும் அறிவும் 

பாரதி படைப்புகளின் தொகுப்பாளர் சீனி.விசுவநாதனின் கால வா¢சைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் ஆறாம் தொகுப்பில் ஒரு கவிதை தென்பட்டது.இந்தக் கவிதை சில பதிப்பகங்கள் வெளியிட்ட பாரதியின் கவிதைத் தொகுப்பில் காணப்படாத கவிதை.இதை ஒட்டி பதிப்பகங்கள் வெளியிட்ட  பாரதி கவிதைத் தொகுப்பை புரட்டிப் பார்த்தால் அந்தக் கவிதை தொகுக்கப்பட்டிருக்கவில்லை.இந்தக் கவிதை மட்டுமல்ல,பாரதி தன் காலத்தில் வெளியிட்ட ,செல்லம்மாள் பாரதி வெளியிட்ட தொகுப்புகளின் பல கவிதைகள் மாற்றி தொகுக்கப்பட்டிருக்கின்றன; தலைப்புகள் திருத்தி வைக்கப் பட்டிருக்கின்றன.பாரதியின் சொந்த கவிதை எது?,மொழிபெயர்ப்புக் கவிதை எது? என்ற தெளிவும் இல்லை 

.இந்த ஆண்டு தமிழக அரசின் வரவு செலவு திட்டக்குறிப்பில்,பாரதியின் கவிதையை இந்திய மொழிகளில் அல்லாது,ஜெர்மன்,பிரெஞ்ச் போன்ற மொழிகளில் மொழி பெயர்க்க நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.இந்த மொழிபெயர்ப்பிற்கு முன்னால் செய்ய வேண்டிய முதல் பணி,பாரதியின் கவிதைகளை காலப்படி முழுமையாகத்  தொகுக்கப்பட வேண்டும் (பல கவிதைகள் காலப்படி தொகுக்கப்பட்டுள்ளன) தி¡¢த்தல்கள் அற்ற,பிழைகள் நீக்கிய,பாடபேதம் அற்ற,ஒரு முழுதொகுப்பு செம்பதிப்பாக வெளிவர ,தகுந்த குழுவொன்றை அரசுஅமைத்து பணி துவக்கப்பட வேண்டும்.பாரதியின் நூற்று முப்பதாவது பிறந்த நாளை கொண்டாடி விட்டோம்.உதவாதினி ஒரு தாமதம் முழுதொகுப்பு வேண்டும்  என குரல்கள் ஒலிக்க வேண்டும். 

மேல் குறிப்பிடப்பட்டுள்ள தென்படாத அந்தக் கவிதை 1910 மார்ச்சில் கர்மயோகி மாத இதழில் வெளியாகி உள்ளது.சாதாரண வருஷத்து தூமகேது என்ற பெயா¢ல்  ஆன கவிதை.75 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொ¢யுமென்று ஹேலியால் கண்டுபிடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட பின் தோன்றிய ஹேலி வால் நட்சத்திரம் பற்றிய கவிதை.(தகவல் உதவி பேராசி¡¢யர் மோகனா)ஒரு படைப்பாளி தான் வாழும் காலத்தில் நிகழும் அறிவியல் உலகம்,அதன் கண்டுபிடிப்புகள்,வெளிவரும் புதிய உண்மைகள் குறித்து அறிந்திருப்பது அவசியம்.அதை நேரடியாக படைப்பாக்குகிறோமா இல்லையா என்பது அடுத்த விஷயம்.ஆனால் படைப்பாளியின் இயங்குதளத்தில் ,அவர்களது  சொற்களஞ்சியத்தில் நடப்பு கால சொற்கள் அறியப்பட்டிருந்தால்தான் ஒன்றை எழுதும் பொழுது சொல்ல வரும் கருத்திற்கான சொல் மிளிரும். 
                                   
பாரதி சொற்குறித்த தேடலுக்கும் அப்பால் சென்று இந்த அறிவியல் அறிவு தற்போது நம்மிடையே இல்லையே என வருத்தப்படுகிறான்.ஆதிகாலத்தில் பலவகை கணித சாஸ்திரங்களும்,இயற்கை நூல்களும் பாரத நாட்டில் பிறந்த பின்பு உலகம் முழுவதும் பரவியிருப்பதாக ஆராய்ச்சில் தொ¢கிறது.ஸயின்ஸ் பயிற்சியில் தீவிரமாக மேன்மைப் பெற்று வருகிறோம்.காலகிரமத்தில் மேன்மை பெறுவோம் என்று அவன் லோககுரு கட்டுரையில் எழுதிப் போகிறான்.சிரமத்தை சுமந்து கொண்டு கட்டுரையில் நம்பிக்கை தொ¢வித்தாலும்,இந்தக் கவிதையில் அவன் கவலையை பகிர்ந்து கொள்கிறான்.அன்னியர் சொல்லிதான் இதுபற்றி நாம் அறிய வேண்டி உள்ளது என குமைகிறான். 

இந்த வால் நட்சத்திர வரவால் இந்தியர்களுக்கு புண்ணியம் வரப்போகிறது ;புதுமைகள் விளையப் போகிறது;சித்தியும்,ஞானமும் கூடப்போகிறது என்கிறாகள் இது பொய்யோ அன்றி மெய்யோ என பாரதி அந்த ஹேலி நட்சட்திரத்திடம் கேட்கிறான்.பாரதிகாலத்தில் ஒரு வால் நட்சத்திரம் குறித்த அதன் இயல்பு குறித்த தெளிவு இல்லை என தொ¢கிறது.சூ¡¢யக் குடும்பத்தின் கடைசி உறுப்பினர்தான் இந்த வால் நட்சத்திரம்.சூ¡¢யன் மேற்பரப்பில் படிந்திருந்து வால் போல் நீளும் பனித் திரளின் வரவும் அதன் காட்சியும்,சூ¡¢யனை சுற்றி வருகையில் பூமிக்கு நெருக்கமாகத்  தொ¢யும் அதன் புலப்பாட்டினால் நன்மையோ அன்றி தீ ££மையோ இல்லை  என்று இன்று மெய்பிக்கப்பட்டுள்ளது.போதிய தெளிவு இல்லாத அந்த காலத்தில்,இது குறித்த ஒரு கவிதை இது பற்றி கட்டுரை,இதன் மீதான விசனங்கள்,அன்னியர் சொல்லித்தானா நாம் அறிய இருக்கிறோம் என வெளிப்படும்  தேச நலன் சார்ந்த சிந்தனைதான் இன்றும் பாரதியை காலம் சுமந்து கொண்டிருக்கிறது. 
 
சிறு பனித்துளியில் நின்று ஒளி வீசும் ,பல கோடி யோசனை தொலைவு கொண்டதும்,மென்மையான வாயுவால் வால் கொண்டதுமான  தூமகேதுவே சுடரே வா என அழைத்து உன்னால் நன்மையா,தீமையா என கேட்டுக் கொண்டே போகிறான்.அவன் காலத்தில் கிடைத்த செய்திப்படி நல்ல கவிதை ஒன்றை பாரதி தந்திருக்கிறான்.அந்த காலத்தில் இது பற்றி புனையப்பட்ட பொய்களை வலுவாக மறுக்க வேறு தரவுகளில்லாத பட்சத்தில் இந்த கவிதையிலும் கொஞ்சம் மயக்கம் தொ¢கிறது.ஆனால் புதிய புதிய தரவுகள் ஊடே தன்னை வளர்க்கத் தவறாதவன் பாரதி.இனி கவிதை: 

தினையின் மீது  பனை நின் றாங்கு

மணிச்சிறு மீன்மிசை வளர்வா லொளிதரக்

கீழ்த்திசை வெள்ளியைக் கேண்மைகொண் டிலகுந்

தூமக் கேது சுடரே வாராய்


எண்னில்பல கோடி யோசனை யெல்லை

எண்ணிலா மென்மை யியன்றதோர் வாயுவாற்

புனைந்தநி¢ன் நெடுவால் போவதென் கின்றார்

மண்ணகத் தினையும் வால்கொடு தீண்டி
ஏழையர்க் கேது மிடர்செயா தேநீ
போதியென் கின்றார் புதுமைக ளாயிரம்
நினைக்குறித் தறிஞர் நிகழ்த்துகின் ரனரால்

பாரத நாட்டிற் பரவிய எம்மனோர்

நூற்கண மறந்துபன் நூறாண் டாயின
உனதியல் அன்னிய ருரைத்திடக் கேட்டே
தொ¢ந்தனம் எம்முள்ளே தெளிந்தவ ¡£ங்கில்லை
வாராய் சுடரே வார்த்தைசில கேட்பேன்
தீயார்க் கெல்லாந் தீமைகள் விளைத்துத்

தொல்புவி யதனைத் துயர்க்கட லாழ்த்துநீ

போவையென் கின்றார்;பொய்யோ மெய்யோ?

ஆதித் தலைவி யாணையின் படிநீ

சலித்திடுந் தன்மையால் தண்டநீ செய்வது

புவியினைப் புனிதமாப் புறிதற் கேயென

விளம்புகின் ரனரது மெய்யோ பொய்யோ?

ஆண்டோ ரெழுபத் தைந்தினி லொருமுறை

மண்ணைநீ£ யணுகும் வழக்கினை யாயினும்;

இம்முறை வரவினால் எண்னிலாப் புதுமைகள்

விளையுமென் கின்றார் மெய்யோ பொய்யோ?


சித்திகள் பலவுஞ் சிறந்திடு ஞானமும்

மீட்டுமெம் மிடைநின் வரவினால் விளைவ்தாப்

புகலுகின் றனரது பொய்யோ மெய்யோ?

1 comment:

  1. பயனுள்ள பதிவு.கம்பனின் "தூமகேது புவிக்கெனத்தோன்றிய"பாடலும் கவனத்திற்குரியது.பாரதி காலத்தை மீறிக்கனவு கண்டவன் என்பதுதான் இன்றும் என்றும் அவனைப்பற்றிப் பேச வைக்கிறது.வாழ்த்துக்கள் முத்து.

    ReplyDelete