சின்னச் சின்ன
முரண்களின் ஊடாகவும்
துளிர்விடும்
கோபத்தீயிலும்
மனச் சருகுகள்
மலரும்
உயிர் நீர்
அன்பின் உரையாடல்
சொல்லற்ற மெளனம்
சூறைக்காற்றின்
பேரோலம்
மயிலிறகொத்த
அன்பின் வருடலில்
வண்ணத் தோகை
விரித்து சிலிர்க்கும் மனம்.
(நன்றி:தும்பைப் பூக்கள் உதிர்ந்த வழித்தடத்தில்
த.மு.எ.க.ச தென்சென்னை)
அழகிய கவிதை
ReplyDelete