Thursday, September 29, 2011

அன்பின் உரையாடல்


சின்னச் சின்ன
முரண்களின் ஊடாகவும்
துளிர்விடும்

கோபத்தீயிலும்
மனச் சருகுகள்
மலரும்

உயிர் நீர்
அன்பின் உரையாடல்

சொல்லற்ற மெளனம்
சூறைக்காற்றின்
பேரோலம்

மயிலிறகொத்த
அன்பின் வருடலில்
வண்ணத் தோகை
விரித்து சிலிர்க்கும் மனம்.

(நன்றி:தும்பைப் பூக்கள் உதிர்ந்த வழித்தடத்தில்
த.மு.எ.க.ச தென்சென்னை)

1 comment: